கரூர், மார்ச் 1- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளப்பட்டி கிரெஸெண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், நூறு அறிவியல் விஞ்ஞானிகளின் முகமூடிகளை அணிந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளியின் முதல்வர் முனைவர் சாகுல் ஹமீத் தலைமை வகித்தார். வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் வி.பழ னியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வி.எஸ்.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஐ. ஜான்பாஷா ஆகியோர் கலந்து கொண்ட னர். கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற அறிவியல் தின விழா விற்கு பள்ளி முதல்வர் தலைமை வகித்தார். 200 மாணவ-மாணவிகள் அறிவியல் விஞ்ஞா னிகளின் முகமூடிகளை அணிந்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். புகளூர் பேரூராட்சி கூலக்கவுண்டனூர் அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ ரசி தலைமை வகித்தார். காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் தின விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டக் குழு உறுப்பி னர் திலகவதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா, மாவட்டத் தலைவர் வி.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.