நாமக்கல், மார்ச் 11- விபத்துகளில் பெற்றோரை இழந்த 14 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உத வித்தொகை பத்திரங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா திங்களன்று வழங் கினார். தமிழ்நாடு அரசின் சார்பில், கல்வி உத வித்தொகை வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட் டத்தில் விபத்துகளில் தாய் அல்லது தந் தையை இழந்த மற்றும் நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநி லைப் பள்ளிகளை சேர்ந்த 14 மாணவ, மாண வியர்களுக்கு கல்வி உதவித்தொகை பத்தி ரங்கள் திங்களன்று வழங்கப்பட்டன. மொத் தம் 14 நபர்களுக்கு தலா ரூ.75 ஆயிரத்திற் கான இட்டு வைப்பு பத்திரம் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார்.