திருவாரூர், செப்.8- முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றியம் கூந்தலூர் ஊராட்சியில் திரு வாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பாக பொதுமக்களுக்கு ஆயிரம் மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.பிரபாகரன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மீனாட்சி சூரியபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். விழாவிற்கு தலைமையேற்று, திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பின ருமான பூண்டி கே.கலைவாணன் பொது மக்க ளுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ஆர்.முருகே சன், குடவாசல் நகர செயலாளர் ஏ.கே.டி.சேரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட சுற்றுச் சூழல் அணியின் மாவட்டத் தலைவர் ஆர். காசிராமன் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகி கள் பங்கேற்றனர்.