districts

img

லால்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 3-

    திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில்  அரசாணை எண் 10-ஐ அமல்படுத்தி தூய்மைப் பணியை ஒப்பந்தமுறையில் தனி யாரிடம் வழங்கி உள்ளனர்.

    இதனால் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டுமே வேலை, 53வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை இல்லை, தினக்கூலியாக ஆண்க ளுக்கு ரூ.350-ம், பெண்களுக்கு ரூ.300-ம்  மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

   இதையடுத்து தூய்மைப் பணியாளர் களுக்கு இதுநாள் வரை வழங்கிய கூலியை  குறைக்கக் கூடாது, வயது வரம்பு, கல்வி  தகுதி பார்க்கக் கூடாது என்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சி சங்கம் சிஐடியு தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   பின்னர் நடந்த முத்தரபு அமைதி பேச்சு வார்த்தையில் தினக்கூலியாக ரூ.507 வழங்குவதாகவும், வயது வரம்பு, கல்வி  தகுதி பார்த்து ஆட்குறைப்பு செய்வதில்லை என உறுதியளித்தனர். இதையடுத்து வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.

  பேச்சுவார்த்தையில், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சி சங்க மாவட்டச்  செயலாளர் பன்னீர்செல்வம், திருச்சி  மாநக ராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் மாறன், சிபிஎம் லால்குடி ஒன்றியச் செய லாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.