தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலை முக்கிய சாலையாக திகழ்கிறது. இந்தச் சாலையில் ரயில்வே கேட்டை தாண்டிய சிறிது தூரத்தில் பாபநாசம் பேரூராட்சி பகுதிக்குள் மின்மாற்றி உள்ளது. இதனுடன் இணைந்துள்ள மின் கம்பங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்மாற்றி அருகில் வயல்களும் உள்ளன. எனவே, விபத்து நிகழும் முன் இந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?