100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, வட சித்தூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.அன்பரசன், விதொச மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் துரைசாமி, தாலுகாத் தலைவர் பி.ஆனந்தராஜ், செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.