districts

img

வசூல் குறித்த மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு கண்டனம்:

திருவாரூர்,பிப்.1-  வசூல் குறித்த  மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் சங்கம் சார்பாக திருவா ரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. திருவாரூர் மாவட்டத் தில் பிஎம்ஏஓய்  திட்டத்தில் 1,159 வீடுகளுக்கு விடுவிக் கப்பட்ட ரூபாய் 11.39 கோடி  தொகையினை   பயனாளிக ளிடம் வசூலிக்க வேண்டும். தவறினால் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணிமேற் பார்வையாளர் ,  ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் வசூலிக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை கண்டித்தும், உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று வலி யுறுத்தி இந்த உண்ணா விரத போராட்டம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.  திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.வசந்தன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் எஸ்.செந்தில் முன்னிலை வகித்தார், மாநிலத்தலை வர் எஸ்.ரமேஷ்,பொதுச் செயலாளர் எஸ்.பாரி,மாநில செயலாளர் ஜ.ஜம்ரூத்நிஷா உட்பட பலர் பங்கேற்றனர். இதைபோல் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் மற்றும் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன் னார்குடி, உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பாக கருப்பு பேட்ஜ்அணிந்து உண்ணா விரத போராட்டம் நடை பெற்றது.