திருவாரூர், பிப்.24 - நான்கு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னார். மாநிலச் செயலாளர் ஜம்ரூத்நிஷா கண்டன உரையாற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் ராஜசேகரன், இணைச் செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 1,159 பயனாளி களிடம் ரூ.11.39 கோடி நிதி விடுவிக்கப் பட்டது. இதை ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்களை வசூல் செய்ய உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும். கணினி உதவியா ளர்கள், ஊராட்சி செயலர்கள், பணி மேற் பார்வையாளர்கள் என பல ஊழி யர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை கை விட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.