districts

ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர், ஆக.24-

     தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றி யம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரிய நாயகிபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்கு நர் பிரசாந்த், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  

     பெரியநாயகிபுரம் ஊராட்சியில் 100-வேலை பணி கள், ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர், சைக்கிள் நிறுத்துமிடம், அகமுடையார் தெரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சமையல் கூடம், வடிகால் வாய்க்கால், ஆதிதிராவிடர் தெரு சிமெண்ட் சாலை, துலுக்க விடுதி வடக்கு குடிநீர்ப் பணிகள், 15-ஆவது நிதிக்குழு பணிகள், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்டவற்றைப் பார்வை யிட்டனர். தொடர்ந்து ஒன்றிய அலுவலகப் பதிவேடுகளை யும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி  உதவிச் செயற் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதி காரிகள் உடனிருந்தனர்.