திருச்சிராப்பள்ளி, ஆக.27 -
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் திருச்சி யில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரிய சாமி துவக்கவுரையாற்றினார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்பு ரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு, ஜாக்டோ-ஜியோ மாநாடு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கிவரும் திருச்சி சார்நிலை கரு வூல அலுவலகத்தை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் அடிப்படை ஊழி யர்கள் அனைவருக்கும் தொழில்வரி செலுத்துவதில் இருந்து முற்றி லும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார்.