புதுக்கோட்டை, அக்.17- பொது அமைதிக்கு பங்கம் விளை விக்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது என மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு சார்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், ‘தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அக்.22 மற்றும் 29 தேதிகளில் காக்கிச்சட்டை மற்றும் கைத்தடிகளுடன் ஊர்வலம் நடத்தப் போவ தாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அமைப்பு நடத்திய பேரணியில், பல்வேறு இடங்களில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள் ளன என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும், இந்தப் பேரணி சிறுபான்மை யின மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையி லும் இருக்கும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.