தஞ்சாவூர், டிச. 8 - ஆன்லைனில் தனிநபர் கடன் வழங்குவதாக கூறி எலக்ட்ரிசியனிடம் இருந்து 16.60 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த வர் நாகராஜன்(54). எலக்ட்ரிசியனான இவருக்கு வாட்ஸ் அப்பில், ஆன்லைன் வழியாக எஸ்.பி.ஐ., பைனான்சியல் லிமிடெட் என்ற பெயரில் தனிநபர் கடன் வழங்குவதாக மெசேஜ் ஒன்று வந்து உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் விளம்பரம் என நினைத்த நாகராஜன், அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் நம்ப ருக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய மர்ம நபர், தனிநபர் கட னுக்கு பிராசஸிங் கட்டணமாக முதலில் 3,100 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாகராஜனும் மர்ம நபர் கேட்ட தொகையை, அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். பின்னர் தனது ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உட்பட பல ஆவணங்களை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பல்வேறு மர்ம நபர்கள் நாகராஜனிடம் போன் செய்து, தனிநபர் கடன் 5 லட்சம் ரூபாய் கிடைக்க உள்ளது என கூறியதால், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில் நாகராஜன் கடந்த 6 மாதங்களாக பணம் 16.60 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். சில நாட்களுக்கு பிறகு, தனக்கு லோன் கிடைக்காததால் மீண்டும் அந்த மர்ம நபரின் மொபைல் எண்ணிற்கு நாக ராஜன் தொடர்பு கொண்டு, “தனக்கு லோன் வேண்டாம். எனது பணத்தை திரும்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இன்னும் சிறிது பணம் செலுத்துங்கள், உங்கள் பணம் முழுமையாக அனுப்பி விடுகிறோம்” என கூறியுள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன், தஞ்சாவூர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.