கரூர், ஏப்.15- முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக் கையால் ரூ.1212 கோடி மின்வாரியத்திற்கு சேமிப்பாகியிருக்கிறது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார். கரூரில் ரூ.10.55 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘அடுத்த மாதம்தான் காற் றாலை உற்பத்தி தொடங்கும். கடந்த இரு நாட்களுக்கு முன் 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின்நுகர்வு வந்துள்ளது. ஒரு நாள் பயன்பாடு ஏறத்தாழ 40 கோடி யூனிட்டை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். மின்சாரம் எந்தவித தடையும் இன்றி சீராக வழங்கப் பட்டுள்ளது. கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேவைப்படும் மின்சாரத்தை டிசம்பர் மாதமே கணக்கிட்டு, இதற்கான பணி கள் டெண்டர் மூலம் ஒரு யூனிட் ரூ.8.50 விலை நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல்வரின் இந்த நடவடிக் கையால் ரூ.1,212 கோடி மின்வாரியத்திற்கு சேமிப்பாகி உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு துணைமின் நிலையங் களை முதல்வர் கொடுத்துள்ளார். அதற்கான இடங்கள் ஆட்சியர் மூலம் தேர்வு செய்யப் பட்டு துணைமின் நிலையங்கள் அமைப்பதற் கான பணிகள் நடைபெறும். மேலும் கரூரை பொறுத்தவரை சிப்காட் அமைக்க இடம் தேர்வு பணியும், அரவக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான இடம் தேர்வு பணியும், முருங்கை பூங்கா இடம் தேர்வு பணியும் நடை பெறுகிறது. 60 நாட்களுக்குள் இடம் தேர்வு பணிகள் முடிந்து அங்கு கட்டிடப் பணிகள் துவங்கும். மின்சாரம் தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்திற்கு 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்’’ என்றார். பேட்டியின்போது, கரூர் மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் த.பிரபுசங்கர், எம்எல்ஏ சிவ காமசுந்தரி, துணை மேயர் தாரணிசரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.