திருச்சிராப்பள்ளி, டிச.29- திருச்சியில் ரூ.1,085 கோடியில் நலத் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வியாழனன்று தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று திருச்சி வருகிறார். அவர் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை மாலை திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கார் மூலம் தஞ்சை செல்லும் அவர் தஞ்சை யில் இரவு தங்கினார். பின்னர் அவர் வியாழக்கிழமை தஞ்சையில் நடைபெ றும் விழாவில் பங்கேற்கிறார். அதன் பின் மதியம் தஞ்சையில் இருந்து கார் மூலம் திருச்சி வருகிறார். மாலை விழா நடைபெறும் கேர் கல்லூரிக்கு செல் கிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்பட மொத்தம் ரூ.604 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புதிய பணி களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக் கான தங்கும் விடுதிகள், கே.கே.நகர் ஆயுதப்படை வாளகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குடன் அழகுப்படுத்தப்படும் பணி கள்,
தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள், மருங்காபுரி வட்டாரத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரத்தில் மண் பரிசோ தனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாக மங்கலம் ஓடத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடி வுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் 28 அரசுத் துறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் ரூ. 1084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடி வுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.