districts

img

மின் கசிவால் கூரை வீடு எரிந்து சேதம் நிவாரண உதவி வழங்கல்

மயிலாடுதுறை, ஆக.8-

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பெரம்பூர் அருகேயுள்ள நீலவெலி கிரா மத்தில் மின் கசிவால் கூரை வீடு  எரிந்து நாசமானது.

    வேலம்புதுக்குடி ஊராட்சிக் குட்பட்ட நீலவெலி மாரியம் மன் கோவில் தெருவில் வசித்து  வருபவர் கண்ணையன் (70)  விவசாய கூலி தொழிலாளி யான இவர், தனது கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நி லையில் திங்களன்று அதிகாலை ஏற்பட்ட மின் கசிவால் கூரை வீடு முற்றிலும் எரிந் தது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த பீரோ,  கட்டில் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில்  கருகி நாசமாயின.

    தகவலறிந்த பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அரசின்  சார்பாக வட்டாட்சியர் சரவணன் ரூ.5 ஆயி ரம், அரிசி, வேட்டி, புடவை உள்ளிட்ட நிவா ரணப் பொருட்களை வழங்கினார்.