districts

ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி

அறந்தாங்கி, ஜூலை 31-

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் மற்றும் விடியல்  அறந்தாங்கி ரோட்ராக்ட் சங்கம் இணைந்து ரோட்டரி மாவட்டம் 3000 அனைத்து சங்க தலைவர்களுக்கும். செயலாளர்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் வி.ஜி. செந்தில்குமார் தலைமை வகித்தார். வருங்கால ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார். ரோட்டரி விருதுகள் குழு தலைவர் லியோ பெலிக்ஸ் லூயிஸ், ரோட்டரி அறக்கட்டளை துணைக் குழு தலை வர் ஆர் சுரேஷ் குமார், மாவட்ட ரோட்ராக்ட் தலைவர் சண்முகவேல், மாவட்ட பிரதிநிதி எஸ்.சண்முகம், முன்  னாள் மாவட்ட ஆளுநர் சொக்கலிங்கம், மண்டல ஒருங்கி ணைப்பாளர் பீர்சேக் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திபோர்ட்சிட்டி ரோட்டரி தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      பயிற்சியின் இரண்டாம் நாள் அறந்தாங்கி நகர்  வீதிகளில் பெண்களுக்கான மற்றும் பெண் குழந்தை களுக்கான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேரணியும், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.