districts

img

காலிப் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்குக!

பெரம்பலூர், பிப்.3 - சாலைப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களில் கிராமப்புற இளை ஞர்களுக்கு வேலை வழங்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க பெரம்ப லூர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை அன்று ரோவர் ஆர்ச் அருகே நடைபெற்றது.  சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செய லாளர் அ.ராஜா வரவேற்றார். துணைத்  தலைவர் மதியழகன் முன்னிலை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர்  த.பழனிசாமி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணி யன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். மாநில துணைத் தலைவர் ச.மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் கால மாக அறிவிக்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் ரூ.5,200 மற்றும் தர ஊதியம்,  1,900 நிர்ணயம் செய்து 7 ஆவது ஊதிய  மாற்றப் பலன்கள் வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்து போன  சாலைப் பணியாளர்களின் வாரிசு களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதி யத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி மற்றும்  நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும்.  சாலைப் பணியாளர் காலிப் பணியி டங்களில் கிராமப்புற இளைஞர் களுக்கு வேலை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படி சரண் விடுப்பு  ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் பொதுக் குழுவில் வலியுறுத்தப் பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி 12.2.2024 அன்று கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு போராட் டம் நடத்தி தமிழக அரசிற்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டப் பொருளாளர் ப.சுப்பிரமணி யன் நன்றி கூறினார்.