மயிலாடுதுறை, நவ.14 - சாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்க மயிலாடுதுறை மாவட்ட பேரவை மாவட்டத் தலைவர் எஸ்.என்.டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. எஸ்.புலவேந்திரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மாநிலப் பொருளாளர் பி.பார்த்தசாரதி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், மாவட் டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டப் பொருளாளர் எம்.கலைச்செல்வன், சிஐடியு நகரச் செயலாளர் எல்.அந்தோணிசாமி ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட எல்லையான கொள்ளிடம் செக் போஸ்ட்டில், அனைத்து ஆவணங்களும் இருந்தும் கட்டாய கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட சாலை போக்குவரத்து சங்க பதிவிற்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். திருக்கடையூர் ஆட்டோ நிலையத் தில் வருவாய்த்துறை கூரை (ஷெட்டு) அமைத்து கொடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆட்டோ நிலையத்தில் வைக்கப்பட்ட சங்க விளம்பர பலகையை அகற்றிய காவல் துறையை கண்டித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக எஸ்.என்.டி.ரமேஷ், செயலாளராக எல்.அந்தோணி பாபு, பொருளாளராக கே.சுரேஷ், துணைத் தலைவர்களாக திருக்கடையூர் பி.ரவி, பி.சுந்தர், கொள்ளிடம் த.தமிழ்செல்வன், துணை செயலாளர்களாக து.பக்கிரி, புல வேந்திரன், சீர்காழி மகாலிங்கம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவும், 24 பேர் கொண்ட மாவட்டக் குழுவும் தேர்வு செய்யப் பட்டது. சிஐடியு பாரதிமோகன் நன்றி கூறி னார்.