மயிலாடுதுறை, ஜூலை 18-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே யுள்ள வல்லம் ஊராட்சி திருச்சம்பள்ளி முதல் முக்கரும்பூர் ஊராட்சி வரை ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தொலைவிலான புதிய சாலை அமைக்கும் பணி துவங்கி யது. முதலமைச்சரின் சிறப்பு சாலை பணிகள் திட்டத்தின்கீழ் நடைபெறும் இப்பணிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் அடிக்கல் நாட்டி பணி களை துவக்கி வைத்தார்.