திருச்சிராப்பள்ளி, ஏப்.1- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், எப்.சி, இன்சூ ரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மோட்டார் வாகன துறையை சீரழிக்கும் சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் சமயபுரம் சுங்க சாவடி அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க பொருளாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மாவட்டக் குழு உறுப் பினர் ரகுபதி, சாலைப் போக்குவரத்து சங்க செய லாளர் சந்திரன், சிபிஎம் பகுதி குழு உறுப்பினர் பாலகிருஷ் ணன், ஆட்டோ சங்க செய லாளர் சந்திரசேகர் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.