districts

img

வருவாய் தீர்வாய நிறைவு விழா

தஞ்சாவூர், மே 19-

    பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வியாழக்கிழமையன்று 1432 ஆம் பசலிக்கான, பேராவூரணி வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு, வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வீ.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

    பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

   இதனைத் தொடர்ந்து வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது.  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ப.அருள்ராஜ், தலைமை உதவியாளர் பிரேம்குமார், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெ.பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.