கரூர், நவ.11 - தனது ஊராட்சியில் உள்ள மக்கள் அனைத்து வசதிகளையும் பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப் பாக பணியாற்றி வருகிறார் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி. 33 ஆண்டுகால ஆசிரியர் பணி மூலம் எண்ணற்ற மாணவச் செல்வங் களை அறிவுமிக்கவர்களாக உருவாக் கிய இவர், தற்போது சொந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகி, மக்க ளுக்குத் தேவையான உதவிகளைச் செய் கிறார். ‘பாடங்கள் வகுப்பறையோடு முடிவதில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஓய்வுக்குப் பின்னும் உழைக் கிறார் இந்த முன்னாள் ஆசிரியர். இதுகுறித்து ஓய்வு பெற்ற ஆசிரி யரும், வரவணை ஊராட்சி மன்றத் தலைவருமான கந்தசாமி கூறியதா வது: வரவணை ஊராட்சிக்கு அரசு ஒதுக் கும் நிதி மற்றும் திட்டங்களை முழுமை யாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். மேலும், எனது சொந்த நிதியிலிருந்தும் பல உதவிகளைச் செய்து வருகிறேன். உயர்கல்வி படிக்க வழியில்லாத சில மாணவர்களுக்கு, சொந்தப் பணத்தில் கல்விக் கட்டணம் செலுத்தி அவர் களைப் படிக்க வைக்கிறேன். இதுதவிர, மருத்துவ முகாம்கள், சட்ட விழிப்புணர்வு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படு கின்றன. இந்நிலையில், எங்கள் ஊராட்சி யில் சாலை, குடிதண்ணீர் வசதி அமைக்க ‘நமக்கு நாமே’ திட்டத்தில் அரசு நிதியோடு, எனது சொந்த நிதி ரூ.5,42,000 ரூபாயை வழங்கியுள் ளேன். மொத்தத்தில் ஊழல் இல்லாத வெளிப்படையான ஊராட்சியாக வர வணை மாறியிருக்கிறது.
என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்கிறேன். ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பிறகு, ஊர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், தேர்தலில் நிற்க சம்மதித்தேன். ‘என்னை வெற்றி பெற வைத்தால் அரசு நிதியை 100 சதவீதம் மக்கள் சேவைக்காக மட்டுமே பயன்படுத்துவேன். இந்தப் பதவி மூலம் ஒரு ரூபாயைக் கூட சொந்த மாக்கிக் கொள்ளமாட்டேன்’ என உறுதி மொழி ஏற்றேன். எங்கள் ஊராட்சிக்குத் தேவை யான அடிப்படை பணிகளைச் செய்ய, ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரைதான் அரசிடமிருந்து நிதி கிடைக்கிறது. ஆனால், இங்கு தேவைகள் அதிகம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு, சொந்த நிதியைப் பயன்படுத்தி பணிகள் செய்யலாம் என்று நினைத்து மகனிடம் பேசி னேன். அமெரிக்காவில் பணிபுரியும் என் மகன் நரேந்திரனும், ஊராட்சி மக்க ளின் தேவைக்காக நிதியுதவி அளிக் கிறார். இதன்மூலம், ஊராட்சியில் இயற்கைக் கட்டமைப்பு, கல்வி சார்ந்த முயற்சிகள், மக்களின் உடல்நலம், தொழில் பயிற்சிகள் என்று எங்களால் இயன்றதை செய்தோம். ‘நமக்கு நாமே’ திட்டம் மூலம் 3 தண்ணீர்த் தொட்டிகள், 3 இடங்களில் சிமெண்ட் சாலைகள் என்று அடிப்படை வசதிகளை செய்ய செலவான ரூ.26 லட்சத்தில் அரசு நிதி போக, ரூ.5,42, 000 என் மகன் மூலம் செலவிட்டேன். அடுத்து, இதே திட்டத்தில் இன்னும் 3 லட்சம் ரூபாய் நிதியில் அடிப்படை வசதிகளை நாங்களே செய்யவிருக் கிறோம். என்னை நம்பி இந்தப் பத வியை வழங்கிய மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே என் கடன். இவ்வாறு அவர் கூறினார். வரவணையைச் சேர்ந்த பழனி வேல் கூறுகையில், “ஆசிரியரால் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். தனது சொந்தப் பணத்தில், இங்குள்ள பள்ளிகளுக்கு கல்விச் சீராக, ரூ.4,20,000 மதிப்பிலான பொருள்களை வழங்கியுள்ளார்” என்றார்.