districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசு கல்லூரியில்  ரத்த தான முகாம்

தஞ்சாவூர், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூ ரியில், திமுக மருத்துவ அணி சார்பில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, ரத்ததான முகாம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப் பாளர் டாக்டர் வி.சௌந்தர ராஜன் தலைமை வகித் தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணா துரை முகாமை துவக்கி  வைத்தார். பேரா வூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் முன்னிலை  வகித்து ரத்த தானம் செய் தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் தஞ்சை மருத்து வக் கல்லூரி மருத்துவ மனை ரத்த வங்கி மருத்து வக் குழுவினர் 71 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். 

தீ விபத்தில் பாதிப்பு: எம்எல்ஏ நிதியுதவி

தஞ்சாவூர், மார்ச் 4-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், மரக்காவலசை கடை வீதியில் வசித்து வருப வர் வி.கே.நீலகண்டன் -  நீலா தம்பதி. இவர்கள் அப்பகுதியில், பள்ளிவா சல் அருகே வீட்டின் முன்புறம் தேநீர்க் கடை வைத்துள்ளனர். மேலும் அங்கேயே தங்கள் குழந்தைகளுடன் குடி யிருந்து வருகின்றனர்.  இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டிலிருந்து வீட்டு  உபயோகப் பொருட்கள்,  குடிசை என அனைத்தும்  தீயில் எரிந்து நாசமா னது. தகவலறிந்த பேரா வூரணி சட்டமன்ற உறுப் பினர் நா.அசோக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில்  சென்று, பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி, ரொக்கப் பணத்தை நிவாரண உதவியாக வழங்கினார். அப்போது, சேதுபாவாசத்திரம் திமுக தெற்கு ஒன்றியச்  செயலாளர் வை.ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குறைதீர் கூட்டங்கள்:  பொதுமக்கள் மனு அளிப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 4 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில், திங்களன்று மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநக ரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக் களை கொடுத்தனர். இந்த கோரிக்கை மனுக்களில், மாநகராட்சிப் பகுதிகளில்,  பி.ஜி.நகரில் தெரு மின்விளக்கு கோரியும், ஜெ.கே.நகர் பகுதி யில் மழைநீர் வடிகால் வசதி அமைத்து தரவும், டி.எஸ்.என் அவன்யூ பகுதியில் சாலை விரிவாக்கம் செய்து தரும்படி யும், பாதாளச் சாக்கடை இணைப்பு உள்ளிட்ட கோரிக்கை  மனுக்கள் பெறப்பட்டன.   பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பை உடனடி யாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து  கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு  மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அலுவ லர்களுக்கு மேயர் தெரிவித்தார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் மக்கள் குறைதீர்  கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய  குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 120 மனுக்களை  ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்க ளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தை நகரப் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் அமைக்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 4 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடந்தது.  கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒவ்வொரு வருவாய் வட்டத்திற்கும், குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர்  நீதிமன்றம் அமைத்து செயல் படுத்தி வருகிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது.  இந்த நீதிமன்றம் தற்சமயம் ஒரு வீட்டில் செயல்பட்டு வரு கிறது. எவ்வித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. இத னால் பொதுமக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். இந்த நீதிமன்றம் ஸ்ரீரங்கம் நகரப் பேருந்து நிலை யத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதி யோர்கள் மற்றும் பெண்கள் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டுமா னால் இரண்டு கிலோ மீட்டர் தூரம்  நடந்து செல்ல வேண்டியுள்ளது.  இதனால் ஏழை, எளிய மக்கள்  குறிப்பிட்ட நேரத்திற்குள் நீதி மன்றத்திற்கு செல்ல சிரமப்படு கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இந்த நீதிமன்றத்தை நகரப்  பேருந்துகள் செல்லும் வழித்தடத் தில் அமைத்தால், பொதுமக்கள் சிரமமின்றி நீதிமன்றத்திற்கு வந்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறியிருந் தார். மாவட்ட ஆட்சியிடம் மனுவை  கொடுத்த போது, சங்க மாவட்டச்  செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட துணைத் தலைவர் செல் வராஜ் ஆகியோர் உடனிருந்த னர்.

வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

பாபநாசம், மார்ச் 4 - தமிழக அரசு வருவாய்த் துறை ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, வேலை நிறுத்தத்தை முடி விற்கு கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள்  கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவா ஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளதால், அரசின் சேவைகளைப் பெற முடி யாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சான்றிதழ்கள், குடிமைப் பொருள்கள் உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. மார்ச் 12 முதல் துவங்க இருக்கும் ரமலான் மாதத்தில், பள்ளிவாசல்களில் நோன்புக்  கஞ்சி காய்ச்சுவதற்கு, அரசால் வழங்கப்படும் அரிசியை  உரிய கட்டணம் செலுத்திப் பெறுவதற்கான, சரியான வழி காட்டுதல்களைப் பெற முடியாத நிலை உள்ளது.  எனவே தமிழக அரசு இதில் உடனடியாகத் தலை யிட்டு, வருவாய்த் துறை ஊழியர்களின் கோரிக்கை களை பரிசீலித்து, வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு  வர வேண்டும். கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது. 

பிரதம மந்திரி நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்கலாம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

பட்டுக்கோட்டை, மார்ச் 4 - பிரதம மந்திரி நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயி கள் வங்கிக் கணக்கு தொடங்கலாம் என தஞ்சாவூர் மாவட் டம் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ரகு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  ஒன்றிய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’  திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம்  வழங்கப்பட உள்ள தவணைத் தொகையை பெற ஆதார்  இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே  விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்கா ரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட்  பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 1.3 லட்சம் விவ சாயிகளிடம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு  இல்லை என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.  தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி  விரல் ரேகை மூலம் ஒருசில நிமிடங்களில் இந்தியா போஸ்ட்  பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்த வந்ததாக எண்ணி வடமாநில முதியவரை தாக்கிய மக்கள்

வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை அரியலூர், மார்ச் 4- ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை  கடத்த வந்ததாக கூறி, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  குழந்தை கடத்தல் நடைபெறுவதாகவும், இதில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு  வருவதாகவும் சமூக வலைதளங்களில் பதி விடப்பட்டு வைரலாகின. இதையடுத்து மாவட்ட போலீசார், குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனவும்,  பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள்  பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டியங்கொல்லை கிராமம்,  வடக்கு தெருவில் வசித்து வரும் ராஜேந்திர னின் பேரன் ஜெகன் (8), ஞாயிறன்று இரவு  வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வடமாநில  முதியவர் ஒருவரை பார்த்து பயந்த அச்சிறுவன் சத்தம் போட்டு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த நபர் சிறுவனை கடத்துவதற்குத் தான்  வந்துள்ளார் என எண்ணி, அவரைப் பிடித்து  தாக்கியுள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார், கிராம மக்களிடமிருந்து அந்த  நபரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  பின்னர் போலீசார் நடத்திய விசாரணை யில், “அந்த நபர் ஒரிசா மாநிலம் குகுந்திபூரி  தாலுகா கோலா ஜாஸ்னா பகுதியைச் சேர்ந்த 58 வயதான பிரதீப் குமார் என்பதும், அவர்  சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, ஜெயங்கொண் டம் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றி  திரிந்ததும் தெரிய வந்தது. இவருக்கு  மனைவி, குழந்தைகள் உள்ளனர். மேலும்,  இவர் தனது முகவரியை ஆங்கிலத்தில்  போலீசாரிடம் தெளிவாக எழுதி காண் பித்துள்ளார். தற்போது பிரதீப்குமார் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் பட்டுச் சேலைகள்
அரசு சிறப்பு தள்ளுபடி அறிவிக்க கோரிக்கை

கும்பகோணம், மார்ச் 4- தமிழக கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் தேக்கம் அடைந்துள்ள பட்டுச் சேலைகளை விற்பனை செய்ய  தமிழக அரசு சிறப்பு தள்ளுபடி வழங்க  வேண்டும் என கைத்தறி நெசவா ளர்கள் சம்மேளனம் (சிஐடியு) கைத்தறி  பிரிவு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன மாநில  பொதுச் செயலாளர் என்.பி.நாகேந்தி ரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி  பட்டு கூட்டுறவு சங்கங்களில், குறிப்பாக  காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபு வனம் மற்றும் பல கூட்டுறவு சங்கங்க ளில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பட்டுச் சேலைகள் இதுவரை இல்லாத அளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருபுவனம் மற்றும் கூட்டு றவு சங்கம், சோழன் கூட்டுறவு சங்கம்  உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்கங்களில்  மட்டும் ரூ.200 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.  இதேபோல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ரூ.300 கோடி மதிப்புள்ள பட்டுச் சேலைகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கூட்டுறவு சங்கங்களில் நெய்யும் நெச வாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்க ளில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை களை, கோஆப் டெக்ஸ் நிறுவனம்  கடந்த ஆண்டை விட குறைவாக கொள் முதல் செய்த நிலையில், இப்போது  கொள்முதல் செய்யாமலேயே உள்ளது.  இந்நிலை தொடருமானால், கூட்டு றவு சங்கங்கள் இயங்குதலும், நெசவா ளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகி விடும். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு சிறப்பு  தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று பல ரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இது வரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசு கைத்தறி நெசவாளர் களை பாதுகாக்க, உடனடியாக கைத் தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி யாகி, கொள்முதல் செய்யப்பட்டு தேங்கியுள்ள சேலைகளை விற்பனை செய்ய, நிபந்தனையின்றி 20 சதவீதம் அரசு  சிறப்பு தள்ளுபடி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.