districts

திருச்சி முக்கிய செய்திகள்

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

பொன்னமராவதி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்  தொடர்பாக தன்னார்வ லர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார  கல்வி அலுவலர்கள் இரா மதிலகம், இலாஹி ஜான்  ஆகியோர் தலைமையி லும், பொன்னமராவதி வட்டார வளமைய மேற் பார்வையாளர் (பொ)  சிவக்குமார் முன்னிலை யிலும் பயிற்சி தொ டங்கியது. ஆசிரியர் பயிற் றுநர்கள் மாளிகை கருப்பு, முகமது ஆசாத்  கருத்தாளராக செயல் பட்டனர்.

பாபநாசத்தில்  கோலப் போட்டி

பாபநாசம், ஜன.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் லயன்ஸ் கிளப், தங்கமயில் ஜுவல்லரி, அன்னை ஸ்ரீ  சாரதா மகளிர் மன்றம் இணைந்து கோலப் போட்டியை நடத்தின. போட்டியில் 60-க்கும்  மேற்பட்டோர் பங்கேற்ற னர். கோலம், ரங்கோலி  என இரு பிரிவுகளில் நடந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆடுகள் திருட்டு: போலீசில் புகார்

பொன்னமராவதி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக் களம்பூரில் ஊர் கிராம  கமிட்டி சார்பில் அனைத்து கிராமத்தின் விழா செலவுகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்படு கின்றன.  அவ்வாறு வளர்க்கப் படும் ஆடுகளில், 10  ஆடுகள் கடந்த டிசம்பர்  மாதம் திருடு போன  நிலையில் பொன்னமரா வதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையி னர், இதுவரை ஆடு திருடி யவர்களை கண்டுபிடிக்க வில்லை. இந்நிலையில் ஊர் கமிட்டி தலைவர்  சீனிவாசன் தலைமை யில், ஊர் முக்கியஸ் தர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து, பொன்னமராவதி காவல்  நிலையத்தில், ஆடுகள் திருடு போன புகார் மீது  உடனடியாக நடவ டிக்கை எடுக்க கோரி மீண்டும் ஒரு புகார் அளித் தனர்.

அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.9 - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் செவ்வா யன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அரு கில் உண்ணாவிரத போ ராட்டம் நடந்தது. போராட் டத்திற்கு ஏஐபிஆர்பிஏ அகில இந்தியத் தலை வர் ராகவேந்திரன் தலைமை வகித்தார்.  போராட்டத்தை விளக்கி பி3 கோட்டச் செயலர் கிரிபாலன் உள் பட பலர் பேசினர். இதில்  அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப் பினர் கலந்து கொண்ட னர்.

புகையில்லா போகி கொண்டாடுவோம்! தஞ்சை ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.9 -  நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில்  உள்ள இயற்கை சார்ந்த  தேவையில்லா பொருட்களை எரித்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.  ஆனால், தற்போது போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக்,  செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு  ஏற்படுவதோடு, இதிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் நோய்த்தொற்றும் ஏற்படுகிறது. எனவே, போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மாசில்லா தஞ்சாவூரை உருவாக்க, புகையில்லா போகி கொண்டாடுவோம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

2.23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

ஆட்சியர் தகவல் அரியலூர், ஜன.9- அரியலூர் மாவட்டத்தில் 2.23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப் படுகிறது என்று ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கை யில், தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட் டத்திலுள்ள தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக் கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு  கிலோ சர்க்கரையுடன் முழுக் கரும்பு  மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படு கிறது. இந்த பரிசுத் தொகுப்பை சிரமமின்றி  தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற வசதியாக, ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத்  தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும்  நேரம் குறிப்பிட்டு ஜன.7 முதல் 9 வரை இல்லங்களுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஜன.10 முதல் 14 வரை பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநி யோகம் செய்யப்படும்.  இப்பணிகள் குறித்த புகாரை சம்பந் தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல்  அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட அளவிலான கட்டுப் பாட்டு அறைக்கு 04329-228131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசியில் 1967, 1800-425-5901 ஆகிய எண்களிலும், ஆணையாளர் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத்துறை சென்னை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 044 28592828 என்ற எண்ணிலும் தொடர்புக் கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

பணி ஓய்வு தூய்மைப் பணியாளர் பிரச்சனைக்கு தீர்வு: சிஐடியு நன்றி

கரூர், ஜன.9 - கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எம்.சுப்பிர மணியன், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி  ஒன்றியம், கூடலூர் மேற்கு ஊராட்சி யில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்தவர் ஆ.பழனிச்சாமி. இவர் 31.07. 2020 அன்று வயது முதிர்வின் காரண மாக பணி ஓய்வுபெற்றார்.  இவர் சிறப்பு காலமுறை ஊதியம்  பெற்று வந்த பணியாளர் என்பதால், பணி ஓய்வின் போது அளிக்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரம், மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000 -ஐ, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி  நிர்வாகம் கடந்த மூன்றாண்டுகளாக வழங்காமல் தாமதித்து வந்தது. இந்நி லையில், சிறப்பு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கரூர் மாவட்டக் குழு சார்பில் ஜன.9 முதல் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பை தொடர்ந்து, க.பர மத்தி காவல் நிலைய ஆய்வாளர் து. முருகேசன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணக் கோரியும், சிஐடியு   போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் இப்பிரச்சனையில் துரித நடவடிக்கை எடுத்து, தூய்மைப் பணி யாளர் ஆ.பழனிச்சாமிக்கு வழங்கப் பட வேண்டிய ஒட்டுமொத்த தொகை ரூ.50  ஆயிரம் மற்றும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000-ஐ பொங்கலுக்கு முன்பாகவே வழங்க சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறப்பு ஓய்வூதிய நிலுவைத் தொகையை, மாவட்ட உதவி இயக்கு நர் (வளர்ச்சி) அவர்களுக்கு கருத்துரு அனுப்பி, பெற்று வழங்கவும் உத்தர வாதம் அளித்தது. இப்பிரச்சனையில் உரிய நடவ டிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் து. முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவ லர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பொறியியல் கல்லூரி  மாணவி தற்கொலை 

தூத்துக்குடி, ஜன.9 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், மந்தித் தோப்பு சாலை பாலாஜி நகரைச் சோ்ந்த சவுந்தர்ராஜன்  (51). ஓய்வுபெற்ற ராணுவ வீரான இவர் கோவில்பட்டி யில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் காவியா  (19). இவர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும்  பேருந்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். திங்கள் காலையில் திடீரென்று வீட்டில் அறை யில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு  தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக் கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தனர். தூக்கில் தொங்கிய காவியாவை மீட்டு சிகிச்சைக் காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே காவியா இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, காவியா எதற்காக தற்கொலை செய்தார்?  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி பாம்பு கடித்து மரணம்

நாகர்கோவில், ஜன. 9- கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு - குமார புரம் அருகே வசித்தவர் பால்ராஜ் (47) ரப்பர் பால் வடிக்கும்  தொழிலாளி. செவ்வாயன்று (ஜன.9) அதிகாலை அருகில்  உள்ள மலைக்கு ரப்பர் பால் வடிக்க பால்ராஜ் சென்றார். அப்போது விஷப்பாம்பு ஒன்று அவரை  கடித்துள்ளது. இதைப் பார்த்த சகதொழிலாளிகள் அவரை சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்து வர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை  நடத்தி வழக்கு பதிவு செய்து உடலை கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்

தூத்துக்குடி, ஜன.9 தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் கடந்த 07.05.2022 நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய  பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த  சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ சதீஷ் என்ற சூப்பி. இவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜர் படுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை போலீசார்  அழைத்து வந்தனர். அப்போது அவர் நீதிமன்ற வளா கத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு செல்வதாக கூறி உள்ளே  சென்றவர் அங்கிருந்த ஜன்னல் வழியாக ஏறி குதித்து பின்புறம் உள்ள முட்புதர் வழியாக தப்பிச் சென்றார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த கைதி போலீசாரை ஏமாற்றி விட்டு கழிப்பறை வழியாக தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட  பேவர் பிளாக் சாலை சேதம்

கடமலைக்குண்டு, ஜன.9- தேனி மாவட்டம் வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிரா மத்தில் காளியம்மன் கோவில் தெருவில் புதிய பேவர் பிளாக்  சாலை அமைக்க ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டு ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தது.  இதையடுத்து கடந்த சில நாட்களாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது  பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏராள மான இடங்களில் பேவர் பிளாக் கற்கள் உடைந்த நிலை யில் காணப்படுகிறது.  பணிகள் முடிவடைவதற்கு முன்பே பேவர் பிளாக் கற்கள் சேதமடைய தொடங்கியுள்ளது குறித்து அந்த  பகுதி பொதுமக்கள் தர்மராஜபுரத்திற்கு கிராமத்திற்கு வந்திருந்த கடமலை-மயிலை ஒன்றிய குழு தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.  மேலும் பணிகள் நடைபெறுவதை அதிகாரிகள் யாரும்  முறையாக ஆய்வு செய்வதில்லை. இதனால் பணிகள் தரமான முறையில் நடைபெறுகிறதா என சந்தேகம் எழு கிறது. எனவே பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து  சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கற்களை உடனடியாக அகற்றி தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேலோ விளையாட்டுப் போட்டிகள் ஜன.12 பெரம்பலூரில் விழிப்புணர்வு மாரத்தான்

பெரம்பலூர், ஜன.9 - கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஜன.12 அன்று பெரம்பலூரில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பெரம்ப லூரில் ஜன.12 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 6 மணி யளவில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் 5 கி.மீ. போட்டி நடைபெற உள்ளது.  இப்போட்டி, 25 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி, பாலக்கரை வளைவு வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறைவு பெறவுள்ளது. மேற்கா ணும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு 15.1.2024 அன்று நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.  மேலும் தமிழ்நாடு அரசின் சார்பாக, கேலோ விளை யாட்டுப் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி லான விழிப்புணர்வு வாகனம் ஜன.8 முதல் 18 வரை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சிறப்பிக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனம், ஜன.15 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு காலை 10 மணிக்கு வர உள்ளது.  இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.சிவா-வை 7401703516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் க.கற்பகம் தெரி வித்துள்ளார்.