districts

img

அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கவில்லை

தஞ்சாவூர், ஏப்.20-  தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடு பட்ட ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினருக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊக்கத் தொகை வழங்கவில்லை எனக் கூறி, சனிக்கிழமை  தஞ்சாவூரில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சா வூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோ ணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், நாடாளு மன்றத் தேர்தலையொட்டி 2,308 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து இந்த வாக்குச்சாவடி மையங்களில், நாடாளுமன்றத் தேர்தல்  பாதுகாப்பு பணிக்காக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மூலம், தஞ்சாவூர்  மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் துறையினர் ஆகியோர் வரவழைக்கப் பட்டனர். அதன்படி கடந்த ஏப்.18 அன்று  தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத் துக்கு வந்த இவர்கள், வாகனங்களில்  அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணி முடிந்ததும், வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும்  தஞ்சாவூர் ஆயுதப்படை மைதா னத்துக்கு வருகை தந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம், சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகம் சார்பில் ஏப்.18 முதல் 20  வரை மூன்று நாட்களுக்கு ரூ.3 ஆயி ரம் ஊக்கத் தொகை வழங்குவதாக காவல்துறையினர் கூறினர். ஆனால்,  தேர்தல் ஆணையத்தின் அரசாணை யில் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி ரூ.4 ஆயிரம்  வழங்க வேண்டும் எனக் கூறி, ரூ.3  ஆயிரத்தை பெற முடியாது என வலி யுறுத்தி ஆயுதப்படை மைதானம் அருகே திடீர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட் டத்தை கைவிட்டனர்.