திருச்சிராப்பள்ளி/நாகப்பட்டினம், பிப்.10 - ஜாக்டோ-ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்ட வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் சனிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாக ராஜன், உதுமான் அலி, குமாரவேல், பால்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு வரவேற்றார். மாநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாள ரும், மாநில ஒருங்கிணைப்பாருமான வின்சென்ட் பால்ராஜ் சிறப்புரை ஆற்றி னார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற் பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப் பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அர சாணை எண்.243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரி யர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப் படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை உடன டியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.15 (வியாழக்கிழமை) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது, பிப்.26 அன்று (திங்கள்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்த போ ராட்ட ஆயத்த மாநாடு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் மற்றும் ஒருங்கிணைப்பா ளர்கள் தலைமையில் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப் பினர் பா.ராணி துவக்கவுரையாற்றி னார். மாநில ஒருங்கிணைப்பாளரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளருமான மன்றம் நா. சண்முகநாதன் நிறைவுரையாற்றினார்.