திருச்சிராப்பள்ளி, பிப்.28 - 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக் கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா கோரி போராட்டம் நடைபெற்றது. திருச்சி விமான நிலையப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலை முறையாக குடியிருந்து வரும் மக்களின் வீடு களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண் டும். வீடுகள் மற்றும் சொத்துக்கான பத்திரப் பதிவிற்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி குழு மற்றும் குடியிருப் போர் நலச் சங்கம் சார்பில் புதனன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் பொன் மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கார்த்திகேயன், மணிமாறன் ஆகியோர் பேசினர். பின்னர் கிழக்கு தாசில்தார் லோக நாதனிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப் பட்டன.