திருச்சிராப்பள்ளி, ஆக.31 - திருச்சி திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு சிக்னல் அருகே வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்களால் தின மும் விபத்து நிகழ்கிறது. கருணா நகர் மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் சாலையில் வேகத் தடை இல்லாததால் பள்ளி மாணவ, மாணவி கள், சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இச்சிரமங்களைத் தவிர்க்க உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் வியாழனன்று திருவானைக்காவல் பகுதி யில் வேகத்தடை அமைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆட்டோ சங்க நிர்வாகி ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். பின்னர் ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமை யில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாக னங்களின் வேகத்தை குறைப்பதற்கு நடவ டிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.