அரியலூர், பிப்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளைய பெருமாள் நல்லூர் கிராமத்தில் காலனி தெருவில், 2021-22 ஆம் ஆண்டில் 15-ஆவது நிதிகுழு மானியத்தின் கீழ் 150 மீட்டருக்கு கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த வாய்க்காலில் நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் வடிகால் வாய்க்கால் மூடப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் விழுந்து கை கால் முறிவும் ஏற்படுகிறது. எனவே, சாக்கடை நீரை அகற்றி, தண்ணீர் வெளியேற பாலம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.