districts

img

தையல் கூட்டுறவு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை

திருவாரூர், செப்.12 -  தையல் கூட்டுறவு தொழி லாளர்களுக்கு அடையாள  அட்டை வழங்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டு உள்ளது. அரசால் வழங்கப்படும் பள்ளி சீருடைகளுக்கு கூட்டு றவு தையல் உறுப்பினர் களுக்கு 2015 முதல் வருடந் தோறும் உயர்த்தி வழங்க வேண்டிய கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். லாப பிரி வினை செய்து ஈவு தொகையை வழங்கிட வேண் டும். மானிய விலையில் மின் சார வழங்க வேண்டும். தையல் தொழிலாளர்க ளுக்கு இலவச தையல் இயந் திரம் வழங்க வேண்டும்.  தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பார பட்சமின்றி துணி வழங்கிட வேண்டும். தையல் தொழி லாளர் கூட்டுறவு தொழிலா ளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட  வேண்டும். நல வாரியத்தில் பணப் பலன்களை அதிகப் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி, தையல் மகளிர் கூட்டுறவு தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டச் செய லாளர் இரா.மாலதி தலைமை  வகித்து கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட் டத் தலைவர் எம்.கே.என். அனிபா ஆகியோர் கண்டன  உரையாற்றினார். போராட் டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கே.பி.ஜோதிபாசு உட்பட 60-க்கும் மேற்பட்ட தையல் தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீயிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.