பாபநாசம், நவ.20 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத் தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்குரிய விளையாட்டு மைதானம் பள்ளி அருகில் உள்ளது. விளையாட்டு மைதானத்தின் முகப்பு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த சுவர் பகுதியில், தனியார் உதவியால் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. இந்த கம்பி வேலியை அகற்றி விட்டு, உயரமான சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோரின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து பெற்றோர் கூறுகை யில், “இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி மயி லாடுதுறை எம்.பி.யாக உள்ள ராம லிங்கம், தனது தொகுதி நிதியி லிருந்து காம்பவுண்ட் சுவர் கட்ட நிதி ஒதுக்கலாம். அவருக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்தது பாபநாசம் சட்டமன்றத் தொகுதிதான்” என்றனர்.