கரூர், ஜன.9 - கல்லடை கிராமத்திற்கு புதிய கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், கல்லடை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவல கத்திற்கு சான்றிதழ் பெறச் சென்றால், எந்நேரமும் பூட்டியே கிடக்கிறது. இந்த அலுவலகம் பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது. இதனால் கிராம மக்கள் தினமும் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே வருவாய்துறையினர் கல்லடை கிரா மத்திற்கு புதிய கிராம நிர்வாக அலு வலரை பணியமர்த்த வேண்டும். தோகைமலை - திருச்சி செல்லும் சாலையில் உள்ள கீழவெளியூர் கடை வீதி மக்கள் அதிகம் நடமாட கூடிய இடம். இங்கு அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இதை தவிர்க்க சாலை யில் வேகத்தடை அமைக்க வேண்டும். கீழவெளியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சில சமூக விரோதச் செயல்கள் நடை பெறுவதை தடுக்க வேண்டும். பள்ளி யில் உடனடியாக கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த வேண்டும். கல்லடை மக்களுக்கு குடிநீர் ஆதார மாக விளங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தொட்டி வலுவிழந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், கல்லடை கிராம ஊராட்சி நிர்வாகமும் உடனடி யாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போர்க்கால அடிப்படையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். கல்லடை கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய அனைத்து பகுதி மக்க ளுக்கும் சீரான குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய் வசதி, தெருவிளக்கு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத் துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கீழவெளியூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோகைமலை வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் எ.பெருமாள், ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.