districts

img

சென்னை-காரைக்குடி இடையே நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை, ஜன.8- சென்னை - காரைக்குடி இடையே தினசரி இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சென்னை எழும்பூர்-காரைக்குடி-சென்னை எழும்பூர் கம்பன் எக்ஸ் பிரஸ் மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தினசரி இரவு ரயிலாக இயக்கப்பட்டது.  இந்த ரயில் திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நின்று செல்லும். ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திரு வாரூர் மற்றும் காரைக்குடி இடையே (150 கி.மீ.,) மீட்டர் கேஜ் பாதை அகல ரயில்பாதையாக மாற்றப் பட்டதையொட்டி இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் 2019-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், கம்பன் ரயில் இயக்கப்படவில்லை. தற்போது அறந்தாங்கி, பேரா வூரணி, பட்டுக்கோட்டை, அதிராம் பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம்  வாராந்திர ரயில் மற்றும் வாராந்திர செகந்திராபாத்-இராமநாதபுரம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் மட்டுமே செல்கின்றன.  தினசரி ரயில் இல்லாததால், அதி ராமப்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், தஞ்சாவூர் அல்லது மன்னார்குடி வரை பேருந்தில் சென்று சென்னைக்கு ரயிலில் ஏற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” நிறுத்தப்பட்ட கம்பன் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை இன்னும் நிறை வேறவில்லை. இதை நினைவூட்டி பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற மாநில அரசு அதிகாரியுமான வி.விவே கானந்தம் ரயில்வேக்கு மின்னஞ்சலில் மீண்டும் கோரிக்கை மனு  அனுப்பியுள்ளார்.