கரூர், ஜூலை 16 -
பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதி யத்தை வழங்கிட வேண்டும். சாலை பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்திட வேண்டும். தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல், முன்னாள் மாநில துணை தலைவர் எம்.சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.