தஞ்சாவூர், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டன் 2 ஆவது தெரு, ஆனந்த வல்லி வாய்க்கால் ஆற்றுப் பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் கட்டவேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி நீலகண்டன் 2 ஆவது சாலை நகரில் போக்குவரத்து நெருக்கடி, பொதுக்கூட்டங்கள், ஊர்வ லங்கள், கோவில் திரு விழாக்கள் நடைபெறும் நேரங்களில் முக்கியமான மாற்றுச் சாலையாக இது உள்ளது. நாட்டாணிக் கோட்டை, கழனிவாசல், கொரட்டூர், ரெட்டவயல், பெருமகளூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி வாக னங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து முக்கி யத்துவம் வாய்ந்த இந்த சாலையில், ஆனந்தவல்லி வாய்க்கால் ஆற்றுப்பாலம் நாட்டாணிக்கோட்டைக்கு முன்பாக உள்ளது. இந்த பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாத தால், பாலத்தை கடக்கும் போது அல்லது எதிரே வாக னம் வந்தால் சற்று தடுமாறி னாலும் பாலத்திற்குள் தவறி விழும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன், பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என பொது மக்களும் வாகன ஓட்டி களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.