திருச்சிராப்பள்ளி, மே 27 - 7-வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படை யில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு உத்தரவு அடிப்படை யில் 30 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக பணி பதிவேடு பதியப்பட்டு நடைமுறைப் படுத்த வேண்டும். ஆப ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதை உத்தரவாதப் படுத்த வேண்டும். தூய்மை காவலர்களையும் உள்ளாட்சித் துறை ஊழியர்களாக நியமனம் செய்து உரிய சம்பளம் வழங்குவதோடு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி கொ ரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்த ஆபரேட்டர்கள், தூய்மைப் பணி யாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பாகுபா டில்லாமல் நிவாரணம் ரூ.15,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மணப்பாறை வட்டம், மருங்காபுரி ஒன்றி யம், கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலா ளர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் பழனிவேல், இந்திய கட்டுமான சங்க மாவட்ட தலைவர் தியாக ராஜன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் கருமன் நன்றி கூறினார்.