தஞ்சாவூர், அக்.28- வரும் 2024 நாடாளுமன்ற தேர்த லில் ஒன்றிய பாஜக அரசை தோற் கடிக்க வேண்டும் என, தமிழ்நாடு மீன வர் பேரவையின் மாநில பொதுச் செயலாளரும், தமிழக அரசின் மீன வர் நல வாரிய துணைத் தலைவரு மான மல்லிப்பட்டினம் தாஜூதீன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், “கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு சிக்கித் தவிக்கிறது. எப்போதுமே மக்களை பதற்றத்திலும், பயத் திலும் நெருக்கடியிலும் வைத்திருப்பதுதான் பாசிச ஆட்சி முறை. அப்படிப்பட்ட ஆட்சி யைத்தான் மோடி தலைமையிலான பாஜக அரசு நடத்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வின் ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால், அசாதாரணமான சூழ்நிலையை இந்திய மக்கள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல் பட வேண்டியது மக்களின் முக்கிய கடமையாகும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை படுதோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற திட்டம் நாட்டு மக்களிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் மக்களின் கருத்துக்கு மாறாக, அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் 2024 தேர்தலிலும் சதித் திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும். இதுபோன்ற செயல் களை முறியடிக்க அனைவரும் ஒன்றி ணைந்து பணியாற்ற வேண்டும்” எனக் குறிப் பிட்டுள்ளார்.