சிபிஎம் வலியுறுத்தல் அறந்தாங்கி, மார்ச் 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் அறந்தாங்கி தாலுகா கண்டிச்சங்காட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ்.இருதயராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, தாலுகா செயலாளர் நாரா யணமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டிகெளதம், விதொச ஒன்றியச் செயலாளர் ராசு, அத்தாணி காளிமுத்து, ஆண்டாகோட்டை பால கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இக்கூட்டத்தில் கண்டிச்சங்காடு கடைவீதிக்கு அருகில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பம் பழுதாகி உள்ளது. அதை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். ஏகணி வயல் கிராமத்தில் உள்ள சேதமடைந்த குடியிருப்பு, சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். ஆடலை கால பைரவபுரத்தில் எரியாத தெரு விளக்கு களையும், ஏகணிவயல் கடைவீதியில் பழுதாகி, பயன்பாடின்றி உள்ள உயர்மின் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும். ஏகணிவயல் கடைவீதியில் இருந்து ஏகணிவயல் தென்பாதி கிராமத்திற்குச் செல்லும் சாலையை செப்பனிட வேண்டும். ஏகப்பெருமகளூர் கண்மாய்க்கு வரும், வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன.