திருச்சிராப்பள்ளி, மார்ச் 21 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்ற னர். பள்ளிக்கு வரும் மாணவிகள் தங்களது சைக்கிள்களை அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வருகின்றனர். இங்கு ஒரு மின்கம்பம் உள்ளது. அதில் ஒரு பெரிய மரம் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் மீது மோதி வளர்ந்து வரு கிறது. இதனால் எந்நேரமும் மின்கம்பம் உடைந்தோ அல்லது மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையிலோ உள்ளன. அத னால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அப்பகுதி வழியே செல்லும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்து மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு செய லாளர் தர்மா தலைமையில் சாலை மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி கள் உடனடியாக மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் மீது படர்ந்தி ருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இதையடுத்து மறி யல் போராட்டம் கைவிடப்பட்டது.