districts

img

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை, ஜூன் 22-  

    மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வள்ளியம்மையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்து மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

    அப்பகுதி மக்கள் தில்லையாடி அருணாசலக்கவிராயர், தியாகி  வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு புத்தகங்களை பரிசாக வழங்கி னர். தொடர்ந்து தில்லையாடி  வள்ளியம்மை வாழ்க்கை வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.

    நிகழ்வில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சி யர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால.ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் அல்மாஸ், திமுக ஒன்றியச் செய லாளர்கள் எம்.அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.