திருச்சிராப்பள்ளி, செப்.11- கட்டிட மராமத்துப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருச்சி வடக்கு காட்டூர் குழந்தைஏசு தெருவில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி டேவிட்ரீகன் (38). இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந் தைகள் உள்ளனர். இந்நிலையில் டேவிட் ரீகன் திருச்சி ஆர்எம்எஸ் காலனி விரி வாக்கப் பகுதியில் உள்ள தனி யார் கார்மெண்ட்ஸ் கட்டிடத்தில் ஞாயிறன்று வேலை செய்து கொண்டிருந்தார். அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி செல்கிறது. எதிர்பாராதவிதமாக டேவிட்ரீகன் மீது உயர்மின் அழுத்த கம்பி பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில், இவருடன் வேலை செய்த மேலும் இருவர் படு காயமடைந்தனர். இவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டேவிட் ரீகன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயர் மின் கம்பிகளுக்கு கீழ் வீடு கட்ட, முறைகேடாக அனுமதி வழங்கிய மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த கட்டிடத் தொழிலாளி டேவிட்ரீகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலி யுறுத்தி டேவிட் ரீகன் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சிஐடியு, மாதர், வாலிபர் சங்கத்தினர் மற்றும் டேவிட் ரீகன் குடும்பத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர் களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து திருச்சி அரசு மருத்து வமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட் டச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள், டேவிட் ரீகன் உறவினர்கள் கலந்து கொண்ட னர். பின்னர், மேற்கு தாசில்தார் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, நிவாரணம் வழங் கப்படும் என போலீசார் உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்ற னர்.