districts

சொத்துகளை அபகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் உறவினர்கள்

அரியலூர், செப்.16 - சொத்துகளை அபகரிப்பதற்காக மாற்றுத்திற னாளிப் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும்  உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து சிலால் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான தனபால் (68). இவரது மனைவி சட்டமுத்து (52). இவர்களுக்கு பாப்பாத்தி (26), ராசாத்தி (22) என 2  மாற்றுத்திறனாளி மகள்கள் உள்ளனர். இவர்கள், கடந்த 60 வருடங்களுக்கு முன்பு தன பாலின் தந்தை வாங்கிய 16 செண்ட் கோவில் மனை யில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலை யில் தனபால் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். தனபால் இறப்பிற்குப் பிறகு, அவரது மனைவி சட்டமுத்து கூலி வேலை செய்து மகள்களை பாதுகாத்து வருகிறார். மூத்த மகள் பாப்பாத்தி 10 ஆம் வகுப்பு வரை  முடித்துவிட்டு, வீட்டில் இருக்கிறார். இளைய மகள் ராசாத்தி 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராசாத்திக்கு 2 கால்களும் லேசாக ஊனமடைந் தவை. இவருக்கு திருமணமாகி பொற்பளிந்த நல்லூரில் வசித்து வருகிறார்.  அவ்வப்போது ராசாத்தி, தன் தாய்வீட்டிற்கு வந்து தாய் மற்றும் சகோ தரியை பார்த்துச் செல்வார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டு உறவினர்களான பழனிச்சாமி, முரு கேசன் மற்றும் முருகேசன் மகன் நவீன் (22) ஆகிய  மூவரும், தங்கள் வீட்டிற்குச் செல்லும்  பாதையை  விறகு கட்டைகளை போட்டும், முள்வேலி போட்டும் அடைத்து வைத்து உள்ளே செல்ல முடியாத அள விற்கு தகராறு செய்து வருகின்றனர். மேலும், எங்கள் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதால், சட்டமுத்து தா. பழூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார். ஆனால் இதில் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்றார் கண்ணீருடன். இதுமட்டுமின்றி, “உங்கள் மூன்று பேரை யும் நாங்கள் பாலியல் ரீதியாக வைத்துக் கொள் கிறோம். இந்த சொத்து முழுவதும் எங்களுக்குத் தான்” எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்கடி தகராறு செய்கின்றனர். இதனால் எங்க ளுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மாற்றுத்திறனாளியான பாப்பாத்தி கூறுகை யில், “எனது இரண்டு கால்களும் செயலிழந்தால், என்னால் எங்கும் நகர முடியாது. பழனிச்சாமி, முரு கேசன், அவரது மகன் நவீன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்வது, எங்களை படுக்கைக்கு அழைப்பது,  தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு, சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் கூறி எங்கள் இடத்தை நேரில்  பார்வையிட்டு, எங்களது இடத்திற்கு பட்டா வழங்க வும், எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுக் கும் நவீன் மீது கடுமையான நடவடிக்கையும்  எடுக்க வேண்டும்” என்றார்.