அரியலூர், அக்.18 - அரியலூர் மற்றும் ஜெயங்கொண் டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன் கிழமை தொடங்கியது. இதில் அரியலூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்ற போட்டியை அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவா ணன், துணைத் தலைவர் கலிய மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.முருகேசன் ஆகி யோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். இப்போட்டிகளில் அரியலூர் வட்டாரத்துக்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமை களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், துவங்கிய நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டத் திட்ட உதவி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் ரவிக்குமார் வரவேற்றார். பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான கலைத் திருவிழா புதன் கிழமை தொடங்கியது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் விழாவை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். நிகழ்ச்சியில், கல்விப் புரவலர்கள் சுப.சேகர், அ. அப்துல் மஜீத், அமைப்பு செயலா ளர் சி.மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொ டக்கப் பள்ளித் தலைமை ஆசிரி யர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கலைத் திருவிழாவில், பேரா வூரணி வட்டாரத்தைச் சேர்ந்த 28 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பங்கேற்று தங்களது தனித்திறனை
வெளிப்படுத்த உள்ளனர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், தலைமையாசிரி யர் ஜீவானந்தம் கலை திரு விழாவை தொடங்கி வைத்தார். பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ வன், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம், ஊராட்சி தலைவர் மஞ்சுளா நடேசன், மணமேல்குடி கவுன்சிலர் ராமச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் வரவேற்றார். மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சீனியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருவிழா ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் மனோகரன் நன்றி கூறினார். இந்த கலைத் திருவிழா வெள்ளிக் கிழமை வரை நடைபெற உள்ளது. இதில், தமிழ் மற்றும் ஆங்கில மொழித் திறன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கிராமிய நடனம், கும்மிப்பாட்டு, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை, மயிலாட்டம், ஒயி லாட்டம், கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித் தல், கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தேர்வு செய்யப்படு பவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறு வர் என்பது குறிப்பிடத்தக்கது.