districts

img

ஆயுள் காப்பீட்டு கழகம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தஞ்சாவூர், ஆக.10 -  

      ஆயுள் காப்பீட்டு கழகம் குறித்து பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.

     தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் நடைபெற உள்ள, ஆயுள் காப்பீட்டு  கழக, தஞ்சாவூர் கோட்ட 61-ஆவது மாநாட்  டையொட்டி, ஆயுள் காப்பீட்டுக் கழகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கான பேச்சு, பாடல், ஓவியம், நாடகம்  ஆகிய நான்கு தலைப்புகளில் போட்டி களில் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

    நிகழ்ச்சிக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழக  பட்டுக்கோட்டை கிளைத்தலைவர் வி.எஸ்.  பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். எல்ஐசி கிளை முதன்மை மேலாளர் கணபதி  சுப்ரமணியன் மாணவர்களுக்கு கலர் பென்  சில்களை வழங்கி, வாழ்த்தி போட்டி களைத் துவக்கி வைத்தார்.  

   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்கப் பொதுச்செய லாளர் ஆர். புண்ணியமூர்த்தி, லிக்காய் மாநி லத் தலைவர் ஏ.பூவலிங்கம், ஆயுள் காப்  பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலை வர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் பரிசுகளை  வழங்கினர். வரவேற்புக் குழுச் செயலா ளர் கே.சம்பத் நன்றி கூறினார். பட்டுக் கோட்டை எல்ஐசி ஊழியர் சங்க உறுப்பி னர்கள் மாணவ-மாணவிகள்-பெற்றோர் கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.