districts

சந்திராயன்- 3 குறித்து 100 இடங்களில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, ஆக.24-

      சந்திராயன் 3-இன் லேண்டர் நிலவில் இயங்கியது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு இடங்க ளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கருத்த ரங்குகள் நடைபெற உள்ளது.

      இதுகுறித்து அறிவியல் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், சந்திராயன்-3 வெற்றியைக் கொண்டா டும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளில் சந்திராயன் மற்றும் வானியலில் உள்ள அறிவியல் குறித்து கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.