districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கட்டிடத்தை திறக்க மறுப்பு

தஞ்சாவூர், டிச.26 - மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கும் கட்டி டத்தை திறக்க மறுத்த ஊராட்சி ஒன்றிய  அலுவலர்களை கண்டித்து நூற்றுக் கணக்கானோர் சாலை மறியலில் ஈடு பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே  யூனியன் அலுவலகத்திற்கு சொந்த மான, வட்டார சேவை மையம் கட்டிடம்  உள்ளது. இங்கு, மாற்றுத் திறனாளிகளுக் கான மருத்துவ முகாம் நடத்துவ தற்காக வசதியாக முகாம் இக்கட்டிடத் திற்கு மாற்றப்பட்டது. இங்கு மாதந் தோறும் காலை 9 மணிக்கு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை, பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார்  250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் காலை 8 மணிக்கே  வந்திருந்தனர். ஆனால் காலை 11  மணியாகியும் கட்டிடம் திறக்கப்பட வில்லை. இது தொடர்பாக மாற்றுத்திறனா ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இங்கு  முகாம் நடத்த யார் அனுமதி கொடுத் தது. நாங்கள் வரும் போதுதான் கட்டி டத்தை திறப்போம்” என பேசியுள்ள னர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த  மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற் பட்டோர் பட்டுக்கோட்டை - முத்துப் பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்ட னர்.  இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 12 மணிக்கு கட்டிடத்தை திறந்து விட்டனர்.  இருப்பினும், ஒவ் வொரு மாதமும் ஊராட்சி ஒன்றிய அலு வலர்கள் முறையாக கட்டிடத்தை திறப்பதில்லை குற்றம் சாட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், ஊராட்சி ஒன்றிய அலுவலர் கள், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல  அலுவலர் சீனிவாசன், பட்டுக் கோட்டை காவல் துணை கண்காணிப் பாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திய பின், முகாம் நடைபெற்றது.  இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கட்டி டத்தை திறப்பதில் தாமதம் செய்து வருகிறார்கள். இது பற்றி ஆட்சியரிடம் முறையிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்துவதற்கு நிரந்தரமாக ஒரு  கட்டடத்தை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றனர்.