districts

img

செங்கொடியேற்றி உற்சாகம்கொண்டாட்டம்

தொழிலாளர்களின் உரிமை முழக்கப் பேரணி

    ஒரத்தநாடு, பாப்பாநாடு, ஆம்பலா பட்டு, நெய்வாசல், தென்னமநாடு உள்  ளிட்ட 58 இடங்களில் கட்சி கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்த ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

    கட்டுமானத் தொழிலாளர்கள் பேர ணியில் ஐயப்பன், கருணாநிதி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவையாறு ஒன்றியத்தில் 31  இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.  ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்  பினர் கே.பக்கிரிசாமி கொடியேற்றி வைத்தார்.

    பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் 42  இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் வெ.ஜீவகுமார் கொடி யேற்றி வைத்தார்.  

    பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்  காட்டுப்பள்ளி உள்ளிட்ட 21 இடங்களில்  கொடியேற்று விழா ஒன்றியச் செயலா ளர் ரமேஷ் தலைமையில் நடைபெற் றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் கொடியேற்றி வைத்தார்.  

   அம்மாபேட்டை ஒன்றியத்தில் 24 இடங்களில் கட்சி கொடி ஏற்றி  வைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித்தார்.  திருவோணம் ஒன்றியம் ஊரணி புரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்  கப்பட்டது.

   ஒன்றியச் செயலாளர் பெரிய சாமி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.  சிஐடியு சார்பில், பாலாஜி நகர் சிஐ டியு அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழ கம், மின்வாரியம், ஆட்டோ சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிஐ டியு கொடியேற்றப்பட்டது.  

பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் துறைமங்க லத்திலுள்ள சிபிஎம் அலுவலகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ. கலையரசி, எஸ்.அகஸ்டின் தலைமை யிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், ஆர். கோகுலகிருஷ்ணன், குன்னம் தாலுகா வில் ஏ.கே.ராஜேந்திரன், சி.செல்ல முத்து. ஆலத்தூர் தாலுகாவில் ஆர். ரெங்கநாதன், எம்.செல்லதுரை ஆகி யோர் தலைமையில் கொடியேற்றப் பட்டது.

திருவாரூர்

   திருவாரூர் ஒன்றிய அலுவலகம் புலிவளத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு  வி.பாலு தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் என்.இடும்பை யன் கொடியினை ஏற்றினார்.

   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்  பூண்டி தெற்கு ஒன்றியத்தில் 45 மையங் களில் மே தின கொண்டாட்டம் நடை பெற்றது. நிகழ்விற்கு, டி.வி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநிலகுழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் கொடியை ஏற்றினார்.  இதேபோல், திருத்துறைப்பூண்டி நகரத்தில் 25 மையங்களுக்கு மேலாக  கொடியேற்றினர் இதில் நகர செயலா ளர் கோபு, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், நகரத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், எம்பிகே.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

   அரியலூர் ஒன்றியம் வாலாஜாநக ரத்தில் மாவட்டச் செயலாளர் துரைசாமியும், எருத்துகாரன்பட்டியில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருணனும், தாமரைகுளத்தில் பாக்கி யமும், ஓட்டக்கோவிலில் மாவட்டச் செயலாளர் துரைசாமியும், பெருமாள் கோவில் டாடா ஏசி, எல்ஐசி லிகாய், சிஐ டியு மாவட்ட அலுவலகங்களிலும் சிஐ டியு சங்க கொடி ஏற்றப்பட்டது.  இதேபோல மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் திருமானூர் பகுதியில் கொடியேற்றப்பட்டது

  இதில்  மாவட்ட துணை தலைவர்கள் சந்தானம்,  தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

   சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் சிற்றம்பலம் தலைமையில் அரசு  சிமெண்ட் ஆலை, மின்சார அலுவலகம்,  அரசு போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது.  

   ஜெயங்கொண்டம் பகுதியில் மாவட்டப் பொருளாளர் கண்ணன் தலை மையில் பல்வேறு இடங்களில் சங்க கொடி ஏற்றப்பட்டது.

   அரியலூர் சிபிஎம் அலுவலகத்தில் கட்சி கொடியினை ஒன்றியச் செயலா ளர் அருண்பாண்டியன் ஏற்றினார். அண்ணாசிலை அருகில் உள்ள கட்சி  கொடியினை ஒன்றியக்குழு உறுப்பி னர் கந்தன் ஏற்றினார்.