கும்பகோணம், மே 11-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம் பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021-ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். அப்போது, அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில், அச்சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து, பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.