districts

ராஜீவ் காந்தி நினைவு தினம்

பேராவூரணி, மே 22-  

    மறைந்த முன்னாள் பிரத மர் ராஜீவ் காந்தியின் 32- ஆவது நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, பேராவூ ரணி ஆவணம் சாலை முக்கத் தில் அமரர் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரி யாதை செலுத்தப்பட்டது.

     நிகழ்ச்சிக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். காங்கிரஸ் சிறுபான்மை துறை  மாவட்டத் தலைவர் ஏ.நாகூர் கனி, உயர் மட்டக் குழு உறுப்பி னர் கே.வி.கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர்  அமுதம் கந்தசாமி, சேவா தளம் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. தெட்சி ணாமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நீல கண்டன், நகரத் தலைவர் பொன் நடராஜன், நகர பொதுச் செயலாளர் பெத்தையன், சிறு பான்மை துறை நகரத் தலை வர் அலாவுதீன், சேவாதளம் நகர செயலாளர் சரவணன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.