தஞ்சாவூர், அக்.24- தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன் னன் ராஜராஜ சோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். சூரியனார்கோவில் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் பேசினார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தொடக் கவுரையாற்றினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா, கோட்டாட்சி யர் செ.இலக்கியா, இந்துசமய அற நிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கருத்தரங்கம், திரு முறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை, கவியரங்கம் உள்ளிட் டவை நடைபெற்றன. சதய விழா நாளான புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.